Monday, February 27, 2006

சர்வதேச வலைபதிவர்கள் மாநாடு - 3

நம்பிக்கை கூகிள் குழுவின் தலைவரும், முத்தமிழ் கூகிள் குழுமத்தின் நம்பிக்கை நட்சத்திரமுமான எங்கள் அன்பு அண்ணன், ஜெயமாருதி பக்தனான நம்பிக்கை ராமர் சென்னையில் சமீபத்தில் நடந்த சர்வதேச வலைபதிவர் மாநாட்டிலும்,முதலாம் முத்தமிழ் குழும மாநாட்டிலும் கலந்து கொண்டார்.அவரின் நம்பிக்கை மொழியில் இதோ மாநாட்டு விவரங்கள்...

வேந்தர் விருந்து

சென்ற ஞாயிறு எங்களுக்கு ஒரு மறக்கமுடியாத நாள். ஏன் என்று கேட்கிறீர்களாக.. இணைய நண்பர்கள் சந்தித்துக் கொண்டோம்.

சுருக்கமாய் சொல்வதாய் இருந்தால் ..

"சித்தமிகு நம்பிக்கை, அன்புடன் முத்தமிழில் சங்கமித்த நாள்" எனலாம்.

விரிவாக எழுதவில்லை என்றால் நம் கடலூர் நடேசன் வீச்சரிவாளோடு வந்திடுவதாய் தகவல்.. எனவே பணிச்சுமைக்கு இடையில் கொஞ்சம் தருகிறேன்.

26-2-06 ஞாயிறு அன்று வழமைபோல் பணிக்கு போகவேண்டி இருந்தது. அமெரிக்கா சின்சின்னாட்டி வேந்தரை/ மற்றும் மற்ற நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டாது போயிடுமோ என்று மனம் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தது.

வேந்தர் சென்னை வந்ததும் போன் பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தாரே ..இன்னமும் பண்ண வில்லையே என்று மனம் எண்ண :(( அவ்வப்போது குறள் ஆசான் இரவா(டாக்டர். வாசுதேவன்)வுக்கு போன் செய்து நிலவரத்தை அறிந்து கொண்டேன்.

பின்னர்தான் தெரிந்தது வேந்தர் நம்மை தொலைத்து விட்டார் என்று...இல்லை இல்லை எனது நம்பரை தொலைத்துவிட்டார் என்று :))

அலுவலக வேலை இருந்தாலும் முடித்தபின்னராவது எவ்வளவு இரவு ஆனாலும் அவரை சந்திக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஏனென்றால் "அன்புடன்" அன்பு காந்தி அவர்களும் வருவதாய் சொல்லி இருந்தார்கள். அவர்கள் எங்கள் இல்லத்திற்கு ஏற்கனவே வருகை புரிந்துள்ளார்கள். மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதே என்று மனதில் எண்ணம் ஓட...

மாலையும் நடைபெற இருந்த அலுவல் நிகழ்ச்சி பகலோடு ரத்தானது.

நம்மோட மகிழ்ச்சியை சொல்லவும் வேணுமோ.. :))

தேனாம்பேட்டையில் இருந்து அடையார் நோக்கி கிளம்பினேன்...

இரவா தந்த முகவரியில் ஆட்டோகாரன் நம்மளை இறக்கிவிட்டான்.

அமுதம் அங்காடி மாடியில் என்பதற்குப்பதில் , மடியில் இல்லை இல்லை...அருகில் என்று இருந்தமையால் அப்படியே ஒரு வாக் செய்து வேந்தர் தங்கியுள்ள ஹெஸ்ட் ஹவுஸ்-ஐ தேடினேன்.

தேடியகண்களில் மின்னல் என நம் இரவா என்பீல்டில் வந்து இறங்குவதைப் பார்த்தேன். இன்னொருவர் வெள்ளை ஜிப்பா வெள்ளை பேண்ட் சகிதமாய் ஸ்கூட்டரில் வந்து இறங்கினார்.. அவரை முன்பின் நன் பார்த்தில்லை எனினும் இவர் யாராக இருக்கும் என்று மனம் கணக்கு போட்டது.

இனி...

ராமா: என்ன சார் எப்படியிருக்கீங்க..

இரவா: வாங்க வாங்க சரியா மணி 3 க்கு வந்திட்டீங்க.. வரமுடியாதுன்னு சொல்லிட்டு இருந்தீங்களே ..

ராமா: (கரணம் தப்பினாலும் காலம் தப்பக் கூடாது) ஆமாங்க! நீங்க சொன்ன நேரத்துக்கு வந்திட்டேன்.. உங்க எல்லாரையும் சந்திக்கனும்கிற எண்ண அலை எனக்கு சாதகமாய் என்னை அழைச்சிட்டு வந்திட்டது.

(வெள்ளை ஜிப்பா காரர் விர்ரென்று எங்களைக் கண்டுக்காமல் மாடிப்படியேறினார்)

ராமா: அது யாரா இருக்கும்

இரவா: தெரியலியே ...

ராமா: சித்தார்த்தோ ..

(இப்போது நாங்கள் இருவரும் மாடிப்படியேறினோம். இரவா , வேந்தர் இருக்கும் அறையை திறந்து உள் சென்றார்.. நானும் அகலக்கண்களை விரித்தபடி உள் நுழைந்தேன் . ஆச்சரியம் வேந்தர் அப்படி ஒரு இளமையாக இருந்தார் (வயதே தெரியவில்லை , என்ன காயகல்பம் சாப்பிடுறாரோ :) ) .

ராமா: வணக்கம்

வேந்தர் : வணக்கம் , வாங்க, அமருங்க

இரவா: இவரை யாரென்று தெரிகிறதா ?

வேந்தர் : ????????????????????? :(

இரவா : ராம்

வேந்தர்:@@@@@@@@@@@@@@@@@ :(

(நான் சிரித்தபடி அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் :)) )

இரவா: நம்ம ராமா பாசிடிவ் ... ராமா

வேந்தர் : ஓ :)) நம்ம பாசிடிவ்ராமாவா..

(இப்போது இருவரும் இருக்கமாகிக்/நெருக்கமாகிக் கொண்டோம்)

வேந்தர் : ராமான்னு சொல்லுங்க..உடனே புரிந்திருக்கும் :)

(வேந்தர் மேற்கொண்டு வாயைத் திறக்கவில்லை ..தலையை மட்டும் ஆட்டியபடி இருந்தார்.. "என்னடா இது குழுமத்தில என்னா லொள்ளு பண்ணுவாரு" இவரா அவர் என்று யோசித்தேன் .. அப்படி யொரு அமுல் வேந்தராய் இருந்தார் ... மிக்க அமைதியோடு )

அந்த வெள்ளை ஜிப்பா வேறயாருமில்லை நம்ம அன்புடன் அன்பர் "சுரேஷ்" என்பது தெரியவந்ததும் மேலும் உற்சாகம் பற்றிக் கொண்டது.

ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டோம்.. மனுசனை சும்மா சொல்லக் கூடாது மூன்று கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார். ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் மிக முக்கியப்பொறுப்பில் இருந்து கொண்டும் அப்படியொரு அடக்கம் அவரிடம்.. குரல் நல்ல கணீர் கணீர் என்று இருந்தது ..அவரும் அப்படித்தான் இருந்தார் :) நல்ல அழகர் :)

அடுத்ததாய் ஒரு விருந்தினர் .. ஆம் அவரது கவிதைகளைப் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இன்றுதான் அவரை சந்திக்கிறம்.. சம்ஸ்கிருத்தில் நல்ல புலமை மிக்க "மதுமிதா" தான் அவர் . பிரபல தமிழ்ப் பத்திரிக்கைகளில் அவரது எழுத்துக்களை நாம் காணலாம்.

[இரவா அவர்கள் மதுமிதாவை குறித்து சொல்கையில் ' இவரது கவிதைகள் எல்லாம் மது இதா..மது இதா என்று சொல்வதுபோல் இருந்ததால் இவர் மதுமிதா ஆகிவிட்டார்..என்று சொல்லியதை மிக ரசித்தேன்.]

அடியேன் யார் என்று அறிந்து கொண்டதும் மிக்க உற்சாகத்தோடு பேசினார்.

இனியும் இந்த இடம் பத்தாது என்று அறையை விட்டு ஹால் (பெரிய அறைக்கு) வந்தோம்..

இப்போ கச்சேரி களை கட்டியது ..

வட்டமேசை மாநாடு போல் இருக்கைகளை அடுக்கிக்கொண்டோம்

சற்று நேரத்திற்குள் இன்னொரு அம்மணி வந்தார்கள். என்னால் யாரென்றே யூகிக்க முடியவில்லை..

மதுமிதா மூலம் அவர்தான் "வலைப்பூ புகழ் " "சித்தம் பிராத்தனை கிளப் புகழ்" நியூசிலாந்து துளசி அம்மா என்பதை அறிந்ததும் எனக்கு ஆச்சரியமாய் ஆனது. ஏனென்றால் மனதில் ஒரு தள்ளாத வயது பாட்டியைத்தான் கற்பனை செய்து வைத்திருந்தேன் (துளசி அம்மா மன்னிக்கவும்) . ஆனால் பாருங்கள். அப்படியொரு படபடப்பு சுறுசுறுப்பு கடகடவென பேசினார்.

இதில் பாசிடிவ் ராமா யாரென்று அவர் கேட்க.. மதுமிதா சொல்லாதீர்கள் என்று என்னை தடுக்க.. அவர் விழிக்க.. சுரேசை முறைத்து முறைத்து பார்க்க.. பின்னர் என் பக்கம் அவர் திரும்புகையில் பாவம் இனியும் அவர்களை யோசிக்க விடக் கூடாது என்று "நான்தேன்" என்றேன்.

ஒரே சிரிப்பு மயம்தான் போங்கள்:))

இருவரும் பரஸ்பரம் வணங்கிக் கொண்டோம்.

இதற்கிடையில் பணிப்பெண் இனிப்பு/காரம் வகைகளை டீபாயில் கொண்டு வைத்தார்கள்....துளசியம்மா அத்தனையையும் தனது டிஜிட்டல் கேமராவில் அடைத்துக் கொண்டார். அதனால் நாங்கள் சாப்பிட முடியாமல் போனது :)) .. காரணம் சாப்பாடு பற்றி எழுதவில்லை யெனில் வலைப்பூ நண்பர்கள் கோபித்துக் கொள்வார்களாம்.)

பல தலைப்புகளில் பேச்சு சென்றது..

இப்போதுதான் நம் "கோவைக்குசும்பு" வேந்தர் நார்மலுக்கு வந்தார் (அதாங்கோ பேச/குசும்ப ஆரம்பித்தார்)


இந்த நிகழ்வில் குவைத் "சித்தார்த்" உள்ளே நுழைந்தார்.. அவர்தான் சித்தார்த் என யூகித்தபடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். அனைவரும் சொன்னோம். அவர் தனது தங்கையின் திருமண அழைப்பிதழை அனைவருக்கும் வழங்கினார். அவர் ஒரு புத்தகப்புழு. எந்தப்புத்தகம் பற்றி கேட்டாலும் அவரிடம் விளக்கம் கிடைக்கும்.

நிறைய கதைகள் போய்க்கொண்டு இருந்தது.

முக்கியமான ஒருத்தர் இன்னும் வரலியே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.. ஆயுசு நூறுங்க! நம்ம அன்புடன் காந்தி உள்ளே நுழைந்தார்கள்.
கலகலப்புக்கு இப்போ பன்ஞ்சம் இல்லை.

ராமா: காந்தி அம்மா! ஷிபு(காந்தியின் சுட்டி பையன்) வரலியா ?
காந்தி : என் கணவர், மாமியார், பையன் எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்கள் ராமா.

(நம்ம சுரேஷ் , காந்தியை கண்டதும் உற்சாகத்தில் குதித்துக் கொண்டே இருந்தார். சுரேஷ், சித்தார்த், காந்தி இவர்கள் ஏற்கனவே சந்திருக்கிறார்கள்...காந்தி மதுமிதாவை வெளிநாட்டில் இருப்பவர் என்று இதுநாள் வரை நினைத்திருந்தாராம்.. அவரும் இப்போதுதான் முதன் முதலில் சந்திக்கிறார்..)

சுரேஷ்:( காந்தியை நோக்கி) எங்களின் புரட்சித்தலைவியே வருக!

காந்தி : ஐயோ இவரு தொல்லை தாங்க முடியலை..

சுரேஷ்:(இர்வாவிடம்) எங்களையெல்லாம் அன்புடன் ஒருங்கிணைத்து கொண்டு செல்வது இவர்தான்.. என்ன காந்தி அம்மா!

காந்தி: என்னாஆஆஅ து அம்மா வா?

சுரேஷ்: ராமா சொன்னாரே அதான் நானும் சொன்னேன்.

ராமா: நீங்க புரட்சித் தலைவின்னு சொன்னதைதான் நான் கொஞ்சம் மாற்றி "அம்மா" என்றேன். என்ன கலர் புடவை(பச்சைப் புடவையில் வந்திருந்தார்) கட்டியிருக்கிறார் பாருங்கள் .

(அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்..இப்போ நம் வேந்தரும் கலாய்க்க ஆரம்பித்தார்)

வேந்தர் : அப்ப உடன்பிறவா சகோதரி..

துளசி: நான் தான் உடன்பிறவா சகோதரி ..

மதுமிதா: உப்புசமா இருக்கீங்க பொருத்தம்தான். ஆனா அம்மாதான் கொஞ்சம் மெலிந்து இருக்காங்க..

(ஹா ஹா)

சுரேஷ்: அப்ப நம்ம இரவா ஐயாவிற்கு தமிழ்த்துறை கொடுத்திட வேண்டியதுதான்.

[ இதற்கிடையே வேந்தரிடம் நான் அமெரிக்க கலாச்சாரம் இங்கிருந்து செல்பவர்களை எப்படி பாதிக்கிறது? எப்படி அவர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள் என்று பலவும் பேசினேன். தனது மனைவிக்கு கூட தெரியாமல் வேந்தர் அவர்கள் செய்து வரும் பல நல்லகாரியங்கள் அவரது உதவும் மனப்பான்மையை வெளிப்படுத்தியது]

[திடீரென்று ஒரு போன் கால் எனக்கு வர...அதை யாரெனக் கேட்க நம்ம கடலூர் நடேசன் சார்..உற்சாகமாய் என்ன ராமா யாரெல்லாம் இருக்கிறாங்க என்று கேட்க.. நான் வேந்தரிடம் மற்றும் இரவாவிடம் கொடுத்தேன். அவர் பேசியதைதான் அனைவரும் அவரது மடலில் படித்துவிட்டீர்களே.. ஒரு அரை மணி நேரமாவது பேசியிருப்பார்கள்.நான் காந்தியிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் கடலூர் மாவட்டக் காரங்க பாருங்க அதான் போனில் கலாய்க்கிறாங்க என்றேன்]

எங்கள் பேச்சு பெண்கள் சுதந்திரம், நம்பிக்கை, அன்புடன், முத்தமிழ், சித்தம் என்று பலவாறு சென்று கொண்டு இருந்தது.

பலகாரங்களை வாணலியில் சுடுவதை அறிவோம். ஆனால் துளசி அம்மா தனது கேமாராவில் பலகாரங்களோடு எங்களையும் சேர்த்து சுட்டுக்கொண்டு இருந்தார். துளசி அம்மா நியுஸிலாந்தில் நடத்தி வரும் வீடியோ லைப்ரரி, பணிகள் குறித்தும் பேசினோம்.

(எனக்கு எதை விட எதை தொட என்று தெரியாமல் மனதில் வந்ததையெல்லாம் வேகவேகமாக தட்டச்சிக் கொண்டு இருக்கிறேன். எழுத்து/கருத்துப் பிழைகளை மன்னிக்க.)

நேரம் ஆறை நெருங்கிக் கொண்டு இருந்தது..

துளசி அம்மா கிளம்ப துவங்கினார்.. கொஞ்சம் பொறுங்கள் என்வீட்டினர் எல்லாரும் இப்போ வந்திடுவாங்க என்று காந்தி சொல்ல.. சொன்னபடி காந்தி குடும்பம் வந்தது.

காந்தியின் கணவரை , மாமியாரை இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன்.

நம்ப முடியவில்லை... நம்ப முடியவில்லை.. என்னால் நம்ம முடியவில்லை...

நம்ம காந்தியோடு கணவரா இவர். மனுசர் அப்படியொரு அமைதி.

அவருக்கு ஜெகந்நாதன் என்ற பெயரைவிட சாந்த நாதன் என்பது மிகப்பொருத்தம். ரொம்ப அமைதியானவராய் சாந்தரூபமாய் , மெலிதான புன்னகையோடு இருந்தார். சும்மா இல்லீங்கோ அவர் மிகச் சிறப்பான ஓவியருங்கோ..(எல்லாத்துக்கும் மேல அவரு எங்க ஊருக்காருங்கோ அதான்..மக்கா ஊருதாங்கோ)

அடுத்து காந்தியின் மாமியார் .. உண்மையில் இப்படியொரு மாமியார் மருமகள் காம்பினேஷன் பார்ப்பது ரொம்ப அரிது. (காந்தி உங்க ரெண்டுபேருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்கோ)

நான் நெல்லை மாவட்டம் அருகில் உள்ளவன் என்பதை அறிந்ததும் மேலும் நெருக்கமாகி விட்டார். ஷிபு கண்ணா அங்கே இருந்த மீன் தொட்டியில் மீன்களோடு விளையாடிக் கொண்டு இருந்தான்.

இப்போ மணி 6.15 ஒவ்வொருவராய் விடைபெற்றனர்.

காந்தி&குடும்பம், சுரேஷ், மதுமிதாம்,துளசி என்று ஒவ்வொருவராய் விடை பெற்றனர்.

எஞ்சி நின்றது.. சித்தார்த், இரவா, நானும்தான். நாங்களும் விடைபெற்றோம்.. வேந்தர் வழியனுப்ப வாசல் வரைக்கும் வந்தார்.

இரவா தனது புல்லட்டை உதைக்க அது அவரைப்போலவே கர்ச்சித்தது..

சித்தார்த் தனது தங்கையின் வாகனத்தில் கிளம்பத் துவங்கினார்.

வேந்தர் : ராமா நீங்கள் இருசக்கரம் வாகனம் வைக்கவில்லையோ ?

ராமா: "நாற்சக்கரம் வாங்கும் வரை பாதையாத்திரை " என்ற எனது சார்பை விளக்கிவிட்டு இரவா அழைத்த்மையால் அவரது வாகனத்தில் அமர்ந்து கொண்டேன்.

இரவா வாகனத்தில் பயணிக்கும் போது இலக்கிய விருந்தளித்தபடி என்னை ஜெமினியில் டிராப் செய்தார்.

பேசியது அத்தனையும் இங்கே எழுத நேரம் பத்தலை. நான் விட்டதை மற்றவங்க தங்களின் பார்வையில் எழுதிடனும்..

இணைய இனிய நண்பர்களின் சந்திப்பு நாளும் தொடரனும்..

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4