Tuesday, February 28, 2006

கடைவீதியில் 4 மாதக் குழந்தையுடன்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் விழியன் இட்ட கவிதைகள்

1. "மறக்காமல் வந்துவிடு என் திருமணத்திற்கு
அழையாமல் வருவேன் உன் திருமணத்திற்கு"

2. கடைவீதியில் நாலு மாதக் குழந்தையுடன்
என் அடையாளம் கூடத் தெரியாமல்
கடக்கையில்...

இதுவும் கடந்து போம்'

3.விருந்து மக்கா விருந்து

கடைசி ஆண்டில்
கரைந்தன சலவை நோட்டுக்கள்
வாழ்வில் கரைசேர்ந்ததற்க்கு
புதிய புதிய நிறுவனங்கள் கல்லூரிக்குக் படையெடுக்க
வந்தது வாராவாரம் விருந்து
"சத்தியம்" சத்தியமாய் அழைக்க வாக்களித்ததால்
குதூகளித்து விருந்தளித்தான் நண்பன்.
அப்போதும் எப்போதும் நாங்கள் விரும்புவது
அமிர்தம் போல உணவு கிடைக்கும் 'அமிர்தா' தான்

ஏழரை மணிக்கு ஆரம்பித்தோம்
ஏழரை சனி ஒழிந்ததற்காக..
இரண்டு குழுக்களாக அமர்வு,
எதிர் - எதிரே
போட்டியுடன் விருந்து
முதல் குழு முதல் உணவு பட்டியலிட
அடுத்த குழு அடுத்த சுற்றில் கூற..
சுற்றின் எண்ணிக்கைகள் கூட மறந்து போக..
நாலுமணி உண்டே பறக்க..
கால் வலிந்த சர்வர்கள் பரிதவிக்க
கடைமூட முதலாளி காத்திருக்க
முடிந்தது போட்டி..
நிறைந்தது வயறு..
யாரும் ஜெயிக்கவில்லை
தோற்றது என்னமோ
விருந்தளித்தவன் தான்
சாப்பாட்டு பில் வந்தபின்

2 Comments:

At 8:28 PM, Blogger J S Gnanasekar said...

நன்றாக இருந்தன.

-ஞானசேகர்

 
At 9:00 PM, Blogger முத்தமிழ் said...

விழியனின் கவிதைகளை ரசித்ததற்கு நன்றி J.S.ஞானசேகர்

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4