Tuesday, February 28, 2006

ஆதி பகவன்

திருக்குறள் உரை எழுதுபவர் எங்கள் முத்தமிழ் கூகிள் குழுமத்தின் தந்தையும் ஆசானுமான முனைவர் இரவா கபிலன் அவர்கள்.

அறத்துப்பால்"
1 கடவுள் வாழ்த்து
திருவள்ளுவர். அருளிய திருக்குறள்


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"


"அகரம்" என்ற சொல்லே முதல் முதலில் உலகில் தோன்றிய ஒலி அதுவே எல்லாவற்றிற்கும் ஆதிமூலமாக இருக்கின்றது.எல்லாப்பொருளும் ஒரு மூலத்திலிருந்தே தோன்றுகின்றன. அதுபோல், மொழியும் ஒரு மூலத்திலிருந்தே தோன்றுகிறது. அந்த மூலம் ஆதிபகவன் என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒலியின் மூலத்திலிருந்து மொழி தோன்றியது என்று குறிப்பிடுகிறது

2.கற்றதனால் ஆய பயனென்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

திருக்குறள் தோன்றிய காலத்தில் மெய்ஞ்ஞானம் ஆட்சிப் பெற்றிருந்தது. அதனையே அதிகமாக மதங்கள் எடுத்தோதின. மெய்ஞ்ஞானத்தின் இறுதி நிலையைக் காண்பது காடவுளைக் காண்பது என்றும், அதனொடு இணைந்து நிலைத்திருப்பதைக் கடவுளுடன் இணைந்திருப்பது என்றும்,
அந்த நிலையை அடைந்தவர்கள் கடவுளாக மதிக்கப்பட்டனர்.

ஆக,

மெய்ஞ்ஞானப் பயிற்சியில் மூலாதாரத்திலிருந்து எழும் ஒளியை ஞானச்சுடர் என்றும், அது மேலெழுந்து செல்வது பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதனால் பாம்பு என்றும் வால் போன்ற ஒரு சுடர் அறியப்படுவதனால் வாலறிவன் என்பர்.


கற்றதினால் ஆய பயன் என்கொல்? ஞானக்கல்வியைக் கற்பதினால் ஆகும் பயன் என்ன? அதனைப் பயின்று, மூலச் சுடரை ஏற்றித் தொழாமல் இருப்போர்க்கு! சுடர் ஏற்றினால் மட்டுமே மெய்ஞ்ஞானத்தினால் கிடைக்கும் பயன் கிடைக்கும். அல்லாவிட்டால், அது ஏட்டுக்கல்வியாகும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதே.

3.. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்

மூலாதாரம் - குதத்துக்கும் குய்யத்துக்கும் இடையில் இருக்கும். முக்கோண வடிவில் நாலிதழ் தாமரை போலிருக்கும்.


சுவாதிட்டானம் - மூலாதாரத்திலிருந்து இரண்டங்குலத்துக்கு மேலிருக்கும் ஆறிதழ் தாமரை போலிருக்கும்.


மணிப்பூரகம் - சுவாதிட்டானத்திலிருந்து ஆறு அங்குல்த்துக்கு மேலிருக்கும். பத்து இதழ் தாமரை போலிருக்கும்.


அனாகதம் - மணிப்பூரகத்திலிருந்து எட்டாவது அங்குலத்தில் இருக்கும். பன்னிரண்டு இதழ் தாமரை வடிவிலிருக்கும்.


விசுத்தி - அனாகத்துக்கு மேல் பன்னிரண்டாவது அங்குலத்தில் இருக்கும். இது, பதினாறு இதழ் கொண்டது.


ஆக்கினை - விசுத்திக்கு மேல் பதினாலங்குலத்தில் இருக்கும். இது இரண்டிதழ் கொண்டது.


இவ்வாறான தாமரை இதழ்கள் கொண்ட நிலையங்களை அடைந்து, ஆங்கே தோன்றும் ஒளியாக மாண்பின் அடியைப் பற்றி நின்றால்
இந்த நிலத்தின்கண் நீண்ட நாள் வாழலாம். என்று, மேற்கண்ட பாடலின் பொருளாகும். இவ்வாறல்லாமல், வேறு முறையில் எவ்வழியினாலும் மரணத்தை வெண்ரு நிலைத்திருக்க முடியாது! என்றறிக.


இதுவே மரணமில்லாப் பெருவாழ்வுக்கான வழியாகும்.

எங்கள் முத்தமிழில் இரவா ஐயாவின் தமிழ்த்தேன் குறள் விளக்கமாய் தினமும் பொங்கி வழிகிறது.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4