Sunday, February 12, 2006

தேவதை ரசிகன்

வணக்கம் முத்தமிழ் உள்ளங்களே., காதல் ஒரு மென்மையான உணர்வு. காதல்" என்று சொன்னாலே சிலருக்கு திக்கும், சிலருக்கு தித்திக்கும். ...சரி சரி விசயத்துக்கு வருவோமா?

காதல் என்று சொன்னால் உங்களுக்கு என்ன்ன என்னவோ எல்லாம் நினைவு வரும் அதை விடுங்கள். ஆனால் 'தேவதை" என்று சொன்னால் உங்களுக்கு எல்லாம் யார் நினைவில் வருவாங்க?... ஐ!!. சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே...நம் வளர்பிறை நிலவே அது!...

எங்கள் நட்புத்தோழன்...அவன் நட்பை போலவே அவன் எழுத்துக்களுக்கும் காதலுக்கும் அத்தனை தோழமை. மென்மைக்காதலின் மேன்மை புரிந்தவன். அறிந்தவன். எல்லோர் மனங்களிலும் கவிதையால் கவிதையாகியவன். காதலர் மாதத்தில் எங்கள் தேவதை நாயகனை.....!!!.... இதோ!!..இதோ!!!

கலக்கப்போவது யாரு? !!! நிலைக்கப்போவது யாரு? தேவதை நாயகன் யாரு"..? காதல் மன்னன் யாரு? இவர்க்கு தானே கொடுக்க வேண்டும் காதல் மன்னன் பட்டம்'....!!.... விஷேச விருந்தாய் 'தேவதை நாயகனோடு" காதலர் தினத்தை வரவேற்போம்'...


1.நிலா ரசிகன் என்ற பெயர் காரணம்?

நிலவின் மெளனம் எனக்கு பிடிக்கும். நிலவைப் போல மெளனமான அழகுடையவள் என் தேவதை. அதனால் நிலாரசிகன்.


2.காதலை பற்றி நீங்கள் எழுதியதில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதை?

அவள் பெயர்.

(இப்படி சொன்னா அடி விழும்...சரி..சரி..இதோ எ.பி.க) .

"உன் பிரிவைக் கூட என்னால் தாங்கியிருக்க முடியும்
அழாமல் நீ பிரிந்திருந்தால்"

3.காதல் பற்றி மற்றவர் எழுதிய உங்களுக்கு பிடித்த கவிதை? எதைக்கேட்டாலும் தருகிறேன்
என் உயிரைத் தவிர
அதை உன்னோடு
வாழ்வதற்காக வைத்திருக்கிறேன் -தபூ சங்கர்.

தண்டவாளத்தில் தலைசாய்த்து
பூத்திருக்கும் ஒற்றைப் பூவாய் நான்.
நீ நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா? -பழனிபாரதி

4.காதல் தோற்பது எப்போது?

எதிர்ப்பார்புகள் நிறைவேறாத போது. எதிர்பார்ப்பு இல்லையெனில் காதலில் என்றும் தோல்வி இல்லை.

5.எந்த மாதிரி காதல் பிடிக்காது?

நாய்க்காதல்(மன்னிக்கவும்) விளக்கம்:- கண்களால் பேசுவதை விடுத்து கைகளால் பொது இடங்களில் பேசுகின்ற காதலில்லாத காதலர்களை.

6.மனைவியை காதலிப்பது போரா,அற்புதமா?

பேரானந்தம். மனைவி என்பவள் தாலிகட்டிய காதலி.

7.நிச்சயிக்கபட்ட திருமணம் குறித்து..?

நிச்சயிக்க பட்ட பின் திருமணத்திற்கு முன் இரு மனங்களும் காதலித்தல் வேண்டும். புரிதலே வாழ்க்கை என்று உணர்தல் வேண்டும்.

8 காவிய காதலர்களில் உங்களை கவர்ந்தவர்கள்?

சாஜகான்,மும்தாஜ். (திருமணத்திற்கு பின்னர் பல குழந்தைகள் பிறந்த பின்பும் காதலாகி வாழ்ந்த காரணத்தினால்)

9.சினிமாவில் பிடித்த காதல் ஜோடி?

கமல்-ஸ்ரீதேவி/ விஜய்-ஜோதிகா

10. பிடித்த காதல் பாட்டு?/.பிடித்த காதல் படம்?

படம்:- நிறைய படமுண்டு,குறிப்பாக மூன்றாம் பிறை, காதல்,அலைபாயுதே.

11.அடிக்கடி முணுமுணுக்கும் காதல் பாட்டு?

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது... காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே....என் நெஞ்சில்..

12 ஒற்றைவரியில் சொல்லுங்கள் 'காதலை"ப்பற்றி

காதல்- வாழும்போதே சொர்க்கம் இனி!!!..காதலால் வளரும், பின்னப்படும் இந்த இழை... இது தொடக்கம்!!!....

கேள்வி கேட்டவர் : விஜி

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4