Friday, February 17, 2006

வீரபாண்டிய கவுண்டமணி - அன்புசெல்வன்

வீரபாண்டிய கவுண்டமணியும், வெள்ளையதேவன் செந்திலும், ஜாக்சன் துரையை சந்திக்க கிளம்புகின்றனர். கவுண்டமணி கெஞ்சினால் மிஞ்சுவார்,மிஞ்சினால் கெஞ்சுவார் என்பது ஜாக்சன் துரைக்கு தெரியாதல்லவா? கால் மேல் கால் போட்டு அட்டகாசமாக உட்கார்ந்திருக்கிறார் ஜாக்சன் துரை.

ஜாக்சன்:"நீர் தான் வீர பாண்டிய கவுண்டமணி என்பவரோ?"

கவுண்டர்:"ஆமான்டா டிபன் பாக்ஸ் மண்டையா. நீதான் ஜாக்சன் துரை அப்படிங்கர முட்டகோஸ் மண்டையனாடா?"

ஜாக்சன்:"ஏது வெகுதூரம் வந்து விட்டீர்?'

கவுண்டர்:நீ மெட்ராஸ்ல உக்காந்திருந்தா உன்னை பாக்கறதுக்கு ரொம்பதூரம் தாண்டா வரணும், பரங்கிக்கா மண்டையா?ஆமா அதென்னாடா நீ இப்படி வெள்ளை வெளேர்னு வெள்ளைப் பண்ணிக்குட்டி மாதிரி இருக்கே? கலரே அப்படியா இல்லை வெண்குஷ்டம் வந்து இந்த மாதிரி ஆயிட்டியா?"

செந்தில்:"அண்ணே கொஞ்சம் அடக்கி வாசிங்க. டுப்பாக்கி கிப்பாக்கி வெச்சிருக்கப்போகிறான்"

கவுண்டர் :"அப்படியாடா சொல்றே?" (பயத்துடன் திரும்பி) "நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேனுங்க ஆபீசர். அதயே விரும்பி நானும் வந்துள்ளேனுங்க ஆபீசர்"

ஜாக்சன்: " நட்பு வேண்டும். ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உன்னிடம்"

கவுண்டர்: "இல்லைங்க ஆபீசர். நான் நல்லா தான் நடப்பேனுங்க ஆபீசர். இதோ பாருங்க ரஜினி மாதிரி நடந்து காட்டட்டுமா?"

ரஜினி,கமல் போல் பல விதங்களில் நடந்து காட்டுகிறார். ஜாக்சனுக்கு கோபம் வருகிறது.

ஜாக்சன்: உன் மீது குற்றம் சுமத்துகிறேன்.
கவுண்டர்:"என்ன குற்றம் அப்படின்னு சொன்னா திருத்திக்கிவேனுங்க ஆபீசர்"

ஜாக்சன்: "சொன்னால் எண்ணிக்கை தெரியாது."

கவுண்டர்: (நக்கலாக)"ஓ ஐ ஆம் சாரி. நீங்க எண்ண தெரியாத தற்குறியா ஆபீசர்?(உரத்த குரலில்) ஆமா எண்னவே தெரியாத உனக்கெல்லாம் எவன்டா வேலை போட்டு குடுத்து ஊரையே கூட்டி பெருக்கற நீளத்துக்கு கவுனையும் மாட்டி விட்டான்?"

ஜாக்சன்:"எனக்கா எண்ணிக்கை தெரியாது?அகமபாவம் பிடித்தவனே, சொல்கிறேன் கேள். பல வருடங்களாக கிஸ்தி,திறை,வரி,வட்டி இது எதுவும் நீ செலுத்தவில்லை"

கவுண்டர்: "வானம் பொழியுது, பூமி விளையுது. நடுவுல வெள்ளைப் பண்ணி உனக்கெதுக்குடா புரோக்கர் கமிஷன்? நீ என்ன என் கூட வயலுக்கு வந்து சோத்துபானை திருடி அடி வாங்கினாயா?என் கூட சேர்ந்து ஊர்ல கடன் வாங்கிகிட்டு ஒண்ணா தலைமறைவானாயா?இல்லைனா முனியம்மா என்னை போட்டு மொத்தினப்ப வந்து காப்பாத்துனையா?இல்லை இந்த பேரிக்கா மண்டையன் கிட்ட நான் சிக்கிதவிச்சப்ப வந்து ஆறுதல் சொன்னாயா?
என்ன எளவுக்குடா உனக்கு நான் கிஸ்தி கட்டணும்?அடேய் டோப்பா தலையா,நான் இங்க வந்தா உங்கிட்ட அஞ்சோ,பத்தோ கடன் வாங்கிட்டு போலாம்னு பாத்தா நீ எங்கிட்டையே வரி வட்டி கேக்காரயா?நியாயமாடா இது?ஆமா தலைல பஞ்சு மிட்டாய வெச்சுட்டு உக்காந்துட்டு இருக்கியே எறும்பு கடிக்காதாடா?"

ஜாக்சன் ஆவேசத்தில் முறைக்க கவுண்டமனி தன் மீசையை முறுக்குகிறார்.

ஜாக்சன்: "என்ன மீசையை முறுக்குகிறாயா?அது ஆபத்துக்கு அறிகுறி.உன்னை கைது செய்ய உத்தரவிடுகிறேன்"

கவுண்டர்: "ஐயோ ஆபீசர்.இது ஒட்டு மீசை.இந்தாங்கோ"

மீசையை தூக்கி எறிந்துவிட்டு கவுண்டர் ஓடுகிறார்.

1 Comments:

At 11:42 PM, Blogger மஞ்சூர் ராசா said...

வீரப்பாண்டிய கவுண்டமணி, ஒரே சிர்ப்புதான் போங்க.

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4