Thursday, February 16, 2006

சன்னலும் windowsம் - விழியன்
















அம்மை தாக்கியதாய் நினைவு..
அழுகை இல்லாமல் வாரக்கணக்கில் விடுமுறை..
தொலைக்காட்சி தொல்லை தொலைவிலிருந்த நாட்கள்..
இரண்டு நாளில் வெறுத்து போனது அனைத்தும்..
உதவிக்கரம் நீட்டியது சன்னல் ஒன்று..
அட என்ன சுவாரஸ்ய உலகமிது..
அழுது கொண்டே அடுத்த வீட்டு பையன் பள்ளிக்கு
அவசர அவசரமாய் அலுவலகத்திற்கு அந்த சொட்டை மாமா
நேரம் தவறாமல் பத்து மணிக்கு பிச்சை..
மத்தியம் கொஞ்சம் மழை....
சருக்காமரமாடியது மழைத்துளிகள் டெலிபோன் கம்பியில்..
கிளம்பிய மண் வாசனை..
குறுக்கும் நெடுக்குமாய் இரண்டு இளவட்டம்
எதிர் வீட்டு அக்காவிடம் சைகை காட்டியபடி...
ஊர் கதை வம்படித்தபடி அம்மாக்கள்..
அன்று..
கை பிடித்து உலகை ரசிக்க சொன்னது சன்னல்..
இன்று..
கையை சுறுக்கி
உலகை மறக்கடிக்க வைத்து..
ரசனையில் மண் அள்ளி..
முடக்கி விட்டது WINDOWS

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4