Sunday, March 05, 2006

நான்கெழுத்தில் என் மூச்சிருக்கும் - அன்புசெல்வன்

என்னை தமிழினி முத்து 4 விளையாட்டில் இழுத்துவிட்டார்.இழுத்து 1 வாரமாகிறது.தாமதத்துக்கு அவர் மன்னிப்பாராக.சரி இதோ என் நாலு

எனக்கு பிடித்த 4 விஷயங்கள்
1.செஸ் ஆடுவது
2.எழுதுவது
3.படிப்பது
4.சினிமா பார்ப்பது

பிடித்த 4 படங்கள்

1.சிவாஜி காமடி படங்கள்
2.பழைய ரவிச்சந்திரன் படங்கள்
3.விட்டலாச்சார்யா படங்கள்
4.பழைய ரஜினி சண்டை படங்கள்

பிடித்த 4 ஊர்கள்
1.காரைக்குடி
2.ராமநாதபுரம்
3.பொள்ளாச்சி
4.கிணத்துக்கடவு

பிடித்த நடிகர்கள் காம்பினேஷன்

1.கவுண்டமணி,செந்தில்
2.ரவிச்சந்திரன்,நாகேஷ்
3.ரஜினிகாந்த், YG மகேந்ரன்
4.சத்யராஜ்,கவுண்டர்,வடிவேலு

பிடித்த 4 உணவகங்கள்
1.பாலாஜி மெஸ்- கிணத்துக்கடவு: அருமையான வீட்டு சாப்பாடு கிடைக்கும்.தலைவாழை இலை போட்டு சூடாக சமையல் செய்து மிகவும் நல்ல காய்கறிகளை வைத்து சமையல் செய்து பரிமாறுவார்கள்.50 பேருக்கு அளவாக தான் சமைப்பார்கள்.அதற்கு மேல் வந்தால் நோ..நோ தான்.

2.அன்னபூர்ணா கவுரிசங்கர் கோவை:கோவையில் இருந்தவர்களுக்கு அன்னபூர்ணாவில் கிடைத்த திருப்தி பைவ்ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டாலும் கிடைக்காது.அங்கு கிடைத்த சாம்பார் இட்லியும்,கள்ளிச்சொட்டு காப்பியும்,மசால் தோசையும் இன்னும் மனதில் நிற்கிறது.

3.பி.எஸ்.ஜி கல்லூரி கேன்டீன்,கோவை:கிட்டத்தட்ட ஒரு ஓட்டல் போலவே சுவையும் தரமும் இருக்கும்.விலை மிக குறைவு.அசத்தலான வெரைட்டியில் தோசைகள்,பிரியாணி என கிடைக்கும்.

4.முருகன் இட்லி கடை,மதுரை:பெயர் தான் இட்லிகடை.ஆனால் எல்லா வகை சைவ உணவுகளும் கிடைக்கும்.மதுரை போனால் இங்கு போகாமல் திரும்புவதில்லை.இந்த கடை இருக்கும் தெருவில் முந்திரிபருப்பு ஜூஸ்,பாதாம் ஜூஸ் என விற்பார்கள்.இதிலெல்லாம் ஜூஸ் போட முடியுமா என அதிசயம் வந்து குடித்து பார்த்து அந்த சுவையும் பிடித்து போய் விட்டது.
மதுரைக்கு போனால் ஜிகர்தண்டா என ஒன்று கிடைக்கும் என்றார்கள்.ஆனால் ஒருமுறை கூட அதை குடித்ததில்லை என்ற வருத்தம் இன்னும் மனதுக்குள் இருக்கிறது.

மிகவும் பிடித்த கோயில்கள்

1.பாலமலை ரங்கநாதர் கோயில்,கோவை

இந்த கோயில் மேல் ஏறுவதே பெரிய சாதனை.மலை மேல் ஏற 4 மணி நேரமாகும்.சுற்றுலா போவது போல் வீட்டில் அனைவரும் போவோம்.அந்த நாட்களை எல்லாம் மறக்கவே முடியாது.

2.திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்: திருமணமாகி மனைவியும் நானும் போன முதல் கோயில்.திருப்பாவை பாடிய அந்த பெண்தெய்வம் நடந்த தெருவில்,அவள் மலர் பறித்த பூங்காவில் நடந்த அனுபவத்தை வாய் விட்டு சொல்ல முடியாது.

3.நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில்: கம்பீரமாக ஆஞ்சநேயர் நிற்கும் அந்த அழகை காண கண் கோடி போதாது.என் அம்மாவும் நானும் இருமுறை போயிருக்கிறோம்.

4.பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோயில் புதிதாக கட்டிய கோயில்.மிகவும் நல்ல முறையில் வைத்திருப்பதுடன்,ஆஞ்சநேயர் பற்றி குட்டிகதைகள் எல்லாம் சொல்லுவார்கள்.

எந்த 4 வலைபதிவர்களை இழுக்கலாம் என யோசித்து பார்த்ததில் கிட்டத்தட்ட எல்லாரும் இழுக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது. ஆக என் நண்பர்களில் இழுக்கப்படாமல் மீதமிருக்கும் நால்வரில் நான் இழுக்க விரும்பும் 4 வலைபதிவர்கள்

1.அன்பை அள்ளித்தரும் எனது இனிய சாம்
2.நெஞ்சம் நிறைந்த நட்பில் கிடைத்த என் அன்பு முபாரக்
3.எனது முத்தமிழ் குடும்பம்.
4. என் இனிய சொந்தம் சிவசங்கர்

1 Comments:

At 11:18 PM, Blogger Dr.Srishiv said...

அருமையான பதிவிது சம்பத் :)நானும் எனக்குப்பிடித்த நான்கினை எழுதி இருக்கின்றேன் தோழா, என் இணைய பதிவாளர் நண்பர்கள் நால்வரை சேர்க்க மறந்தேன், அதில் முதலாவதாக நீ இருக்கின்றாய்...:)
நன்றிகளுடன்,
ஸ்ரீஷிவ்...:)

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4