Monday, May 22, 2006

சுதந்திர தீபம்

பாண்டியர் காவியம்

(சுதந்திர தீபம்)


(வெண்பா)

செந்தமிழ் சேர்ந்த மருது வரலாற்றை
சிந்தையால் தேர்ந்தே சிறுவர்க்குப் - பந்தமுடன்
சின்னஞ் சிறுகவிதைக் காவியத்தைச் செய்திட்டேன்!
அன்னை தமிழ்வாழ்க வென்று.



இல்லறம் நோக்கிப் பாயும்
இனியவள் வைகைப் பெண்ணாள்

நல்லற வளர்ச்சிக் காக
நல்கிய பரிசைப் போன்று
சொல்லவே மணங்க ளிக்கும்
சுவைப்பலாக் கனிக ளோடு
மெல்லவே நடந்து வந்தே
மிளிர்கிறாள் பாண்டி நாட்டில். 1.

மலைமகள் உடலைச் சுற்றி
மணிக்கலன் அணிகள் பூட்டிக்
கலைமகள் அழகைப் போல
கரையெள்ம் நகைகள் சேர்த்தே
அலைமகள் வைகைப் பெண்ணின்
அணியெள்ம் செல்வ மெல்லாம்
நிலந்தனில் வந்த போல
நிறைந்தன ஏரிகு ளங்கள். 2.

ஊரார்கள் கூட நின்றே
ஒலித்தனர் வைகை போற்றி
'நூறாறு செல்வம் பெற்றே
நும்மனை செழிக்க' என்றார்!
தீராத ஆசை கொண்ட
தீந்தமிழ்ப் பாவ லர்கள்
'பேறான பேறு வைகைப்
பெண்ணையும் பெற்ற தென்றார்!' 3.

மருமகள் போன்ற வைகை
வருகையைக் கண்ட ஊரார்
'திருமகள் போன்றாள்!' என்றே
தேர்ந்தனர்! ஆடிப் பாடிப்
பெருகவே செல்வ வெள்ளம்
பிறக்கவே வளமும் ஆறாய்!
அருமறை கண்ட வர்கள்
அளித்தனர் வாழ்த்துப் பாக்கள். 4.


புதுமனை புக்ந்த பெண்ணின்
புதுமணக் கோலம் போல

மதுமலர் வாசத் தோடு
மனைநலம் பெருகிச் செல்ல
முதுமையர் பாண்டி நாட்டார்
முத்தமிழ் வளர்க்க வென்றே
வதுவையாய் வந்த வைகை
வளத்தினால் வளங்கள் வாழும்! 5.


செல்வத்தின் செல்வ மான

சிரஞ்சி வைகைப் பெண்ணாள்
செல்கின்ற விடங்க ளெல்லாம்
சிறப்புடன் செல்வம் பெற்றுச்
செல்வர்கள் வாழும் நாடாய்ச்
சிறுகுடி பெம்ங்குடி யாகச்
சொல்லவே அரிய தான
சுகங்களோ கூடிற் றம்மா! 6.

வளங்களைப் பெற்ற வைகை
மண்டல மக்க ளெல்லாம்
களங்கமே இல்லாக் கல்விக்
கடலினில் ஆடி னார்கள்!
குளங்களும் ஏரி ஆறும்
கூடவே நிலங்க ளெல்லாம்
களங்களை நிறைக்கும் செஞ்நெல்
கதிர்வவூம் மிகுக்க லார்! 7.

அன்புடன்
இரவா

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4