Monday, July 10, 2006

யார் இவர்?



அன்பு நண்பர்களே தனிமையில் அமைதியாக உட்கார்ந்து கடிதம் படித்துக்கொண்டிருக்கும் இந்த நண்பர் யாரென்று தெரிவிப்பவர்களுக்கு அருமையான பரிசு காத்திருக்கிறது.
பலரும் கேட்டதற்கிணங்க இந்த புகைப்படத்துடன் இரண்டு புதிய போட்டிகளும் சேர்ந்துக்கொள்கின்றன. ஆக மொத்தம் மூன்று போட்டிகள். மூன்று பரிசுகள்.

மூன்றிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பம்பர் பரிசு காத்திருக்கிறது.


இப்பொழுது போட்டிகள் பற்றிய விவரம்:

இந்தப் படத்தில் இருப்பவர் யார்
இந்தப் படத்திற்கான அருமையான கவிதை
இந்தப் படத்திற்கான அருமையான சிறுகதை.

நிபந்தனைகள்:

1. கவிதை 15 வரிகளுக்கு மேல் போகக் கூடாது. மரபுக் கவிதை, வெண்பா, புதுக்கவிதை, உரைநடைக்கவிதை என எப்படி வேண்டுமானலும் இருக்கலாம்.

2. கதை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். (நகைச்சுவை, சோகம், உணர்ச்சி ததும்ப என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்)

3.முக்கிய நிபந்தனை: ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்தக்கூடாது. எழுத்துப்பிழைகளுக்கு மதிப்பெண்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.

4. ஒருவரே மூன்று போட்டிகளிலும் கலந்துக்கொள்ளலாம்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

ஆக்கங்களை அனுப்ப கடைசி தேதி 20.7.2006

அனுப்ப வேண்டிய முகவரி: muththamiz@gmail.com

Sunday, July 09, 2006

மாகோ'வின் உளரல்

இது எப்படி இருக்கு (178)
ஞானம்
=============================

1. கீழ்நிலை: மாக்கள்
==================
இவற்றின் வாழ்க்கை,
ஒன்றிலிருந்து மற்றொன்று
மாறுபட்டிருப்பதில்லை.
எல்லாமே இயற்கையாக
பிறந்து, வளர்ந்து,
இறந்துபோகும் அல்லது மற்ற
உயிர்களுக்கு
உணவாகிவிடும்.
சில, மற்ற மாக்களையும்
உண்டு வாழும் - ஆனால்
இயற்கையின்
நியதிப்படிதான்.


2. இடைநிலை: மக்கள்
====================
ஒருவரிலிருந்து மற்றவர்
பலவகைகளிலும்
மாறுபட்டிருப்பர்.
நாடு, மொழி, மதம், இனம், சாதி
போன்ற பலவழிகளிலும்
பிரிந்து வாழ்வர்.
மீன், கோழி, ஆடு, மாடு, நாய்..
போன்ற மாக்களைக் கொன்று,
தின்று வாழ்வர்.
இவ்வளவுக்கும் இவர்கள்
காய், பழம், கீரை
போன்றவற்றை
உண்ணவேண்டியதுதான்
இயற்கையின் நியதி.



3. மேல்நிலை: நல்ல
மனித(ஆத்)மாக்கள்
===================================
இயற்கையின் உண்மையை
புரிந்துகொண்டவர்கள்.
உயிர்களை
துன்புறுத்தமாட்டார்கள்.
மக்கள் செய்யும்
'கோமலித்தனங்க'ளை
சிறுகுழந்தை செய்யும்
குறும்புகளாக எண்ணி
மன்னிப்பவர்கள்.
'அவனன்றி ஓரணுவும் அசையாது'
என்ற உண்மை புரிந்தவர்கள்.


4. அதுக்கும் மேலே: ஞானிகள்
=======================
மேற்குறிப்பிடப்பட்ட எந்த
நிலையைப் பற்றியும்
கவலைப்படாதவர்கள்.
பாசம், பற்று அனைத்தயும்
அறுத்தவர்கள்.
பேருக்கும் புகழுக்கும்
அப்பாற்பட்டவர்கள்.
எனக்குத்தெரிந்து ஒருவர்
இருந்திருக்கிறார், அவர்
தான் புத்தர்.

=================
மாகோ'வின் உளரல்
2004

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4