Thursday, September 06, 2007

முத்தமிழ் குழுமம்

அன்புள்ள தமிழ் இதயங்களே

முத்தமிழ் குழுமம் முதலாம் ஆண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னமும் சில மாதங்களே உள்ளன. முத்தமிழின் இரண்டாம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். நம் முத்தமிழ் குழுவுக்கு நல்ல ஆதரவளித்த வலைபதிவு பெருமக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

முத்தமிழ் கூகிள் குழுமம் மற்றும் முத்தமிழ்மன்றம் குறித்து சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். முத்தமிழ் கூகிள் குழுமமும், முத்தமிழ் மன்றமும் முற்றிலும் வேறு வேறு என்பதை தெளிவிக்க விரும்புகிறோம். முத்தமிழ் கூகுள் குழுமம் வலைபதிவர் மற்றும் தமிழ் ஆர்வலர் மஞ்சூர் ராசா மற்றும் பல தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படும் குழுமம். தமிழ்மணத்தில் சிறப்பாக வலைபதியும் பலரும் முத்தமிழ் கூகிள் குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் (குழுமத்தில் உள்ள இணைப்புகள் பட்டியலில் பலரின் பெயர்கள் உள்ளன)

முத்தமிழ் வலைபதிவுக்கும், குழுமத்துக்கும் உங்கள் மேலான ஆதரவை என்றும் தொடர்ந்து நாடுகிறோம்.

Labels:

3 Comments:

At 5:37 PM, Anonymous Anonymous said...

நல்ல வேளை,மன்றமும் & குழுமமும் வேறு என்று சொல்லிவிட்டீர்கள்..
ஏனென்றால் மன்றத்தின் மேல் உள்ள கறை இன்னும் துடைக்கப்படாமல் இருக்கிறது.

 
At 6:42 PM, Blogger மாதங்கி said...

வாழ்த்துக்கள்

மாதங்கி

 
At 8:23 AM, Blogger முத்தமிழ் said...

அனானிமஸ் மற்றும் மாதங்கி அவர்களுக்கு முத்தமிழ் குழுவின் மனமார்ந்த நன்றிகள்

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4